Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Sunday, 4 August 2013

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 26 February 2013

உங்களுக்கு தெரியுமா..?


உங்களுக்கு தெரியுமா..?

1.வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

2.குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

3.புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

4.ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

5.சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

6.தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

7.கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8. 8மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

9.சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

10.இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

11.திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

12.கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

13.எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

14.40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

15.சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

16.பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

17.வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

18.பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

19.நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

20.லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

21. 15எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

22.குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

23.எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

24.வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

25.சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

26.கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday, 21 February 2013

அறிய வேண்டிய தகவல்கள்

 அறிய வேண்டிய தகவல்கள்!

1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)

2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்

7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்

10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்

11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.

12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.

18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

19.ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 20 February 2013

தெரிந்து கொள்வோம் வாங்க....


தெரிந்து கொள்வோம் வாங்க....

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

தகவல்:யாழ் இணையம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 15 February 2013

உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் அறிவியல்


உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் அறிவியல்


1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்த து. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர்.
3.சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.
4.சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.

5.ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப் படுகின்றன) 1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.
6.எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.
7.2010க்குள் கால்வாசி செடி இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.
8.உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.
9.மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல் கள்.
10.பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க் கின்ற‌ன‌.

11.சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள் ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.
12.ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த் தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.
13.லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே ம‌று கையில் வ‌ரையுவும் செய்வார்.
14. க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை
15. நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல் ம‌ருத்துவ‌ர் க‌ள் ப‌ரிந்துரைக்கின்றார்க‌ள்.
16.க‌ர‌ப்பான்பூச்சி த‌லையின்றி ப‌த்து நாள் வ‌ரை உயிர் வாழும்

17.விர‌ல்க‌ளில் ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌ லில் மிக‌ நிதான‌மாக‌வும், ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ரு மாம்.
18. நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட் கின்ற‌தாம்.
19. ஒவ்வொருவ‌ரின் கை ரேகையும் த‌னித்துவ‌மான‌து. அதே போல‌ தான் நா ரேகையும்
20. ப‌ன்றிக‌ள் தானாக‌ வான‌த்தை பார்ப்ப‌து சாத்திய‌மே இல்லை
21. கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன்
22. ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம்.

23. ப‌ட்டாம்பூச்சிக‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌.
24. கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பா ம‌ல் காண‌முடியும்.
25. நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ஆனால் அது ம‌னித‌ னை விட‌ வேக‌மாக‌ ஓடும்.
26. க‌ண் இமைக‌ளில் ம‌னித‌னுக்கு 550 முடி இருக்கின்ற‌து.
27. அண்டார்டிகா க‌ண்ட‌த்தில் ம‌ட்டும் நிலங்கள் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இட‌மும் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு மேல் தான் உள்ள‌து.
28. வாத்தின் குவாக் குவாக் ச‌த்த‌த்தை கேட்டிருக்கின்றீர்க‌ள் அல்ல‌ வா? அத‌ன் ஒலி ம‌ட்டும் எதிரொலிப்ப‌தே இல்லை. இதுவ‌ரை ஏன் என் று தெரிய‌வில்லை.

29. டைப் ரைட்ட‌ரில் முத‌ன் முத‌லாக‌ த‌ட்ட‌ச்ச‌ப்ப‌ட்ட‌ நாவ‌ல் ‍ டாம்சா ய‌ர்
30. த‌ங்க‌ மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மை யாக‌ மாறிவிடுமாம்.
31. ப‌னிக்க‌ர‌டிக‌ள் ஒரே அம‌ர்வில் 86 பென்குயின்க‌ளை விழுங்கு மாம்.
32. டான்பின்க‌ள் ஒரு க‌ண்னை திற‌ந்து வைத்த‌ப‌டியே உற‌ங்குகின் ற‌ன‌.
33. மாடுக‌ளை மாடிப்ப‌டிக‌ள் ஏற‌வைக்க‌லாம், இற‌ங்க‌ வைக்க‌ முடி யாது.
34. ம‌னித‌னின் மூக்கும் காதும் வ‌ள‌ர்ந்துகொண்டே போகும், ஆனா ல் க‌ண்க‌ள் வ‌ள‌ராது.
35. வ‌யிறு நிறைய‌ உண்ட‌ பிற‌கு, ச‌ற்று நேர‌ம் கேட்கும‌ திற‌ன் குறை யுமாம்.

இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்.
Please Share.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 10 February 2013

கலைகளின் வகைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்


ஒவ்வொரு நாட்டினரும் தங்களது கலைகளை பற்றி நன்கு அறிந்திருப்பர். தமிழர்கள் நாம் நமது கிராமங்களில் நடைபெறும் ஆட்டங்கள் மற்றும் கூத்து கலைகளின் வகைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ஆட்டங்கள்:

•             கும்மி
•             மயிலாட்டம்
•             காவடியாட்டம்
•             பொய்கால் குதிரை ஆட்டம்
•             தெருக்கூத்து
•             ஒயிலாட்டம்
•             பாம்பாட்டம்
•             உருமி ஆட்டம்
•             புலி ஆட்டம்
•             பறை ஆட்டம்
•             கரகாட்டம்
•             மாடு ஆட்டம்
•             உறியடி ஆட்டம்
•             கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம்
•             சிலம்பாட்டம்
•             கோலாட்டம்
•             குறவன் குறத்தி ஆட்டம்
•             கைச்சிலம்பாட்டம்
•             தேவராட்டம்
•             தப்பாட்டம்
•             காளியாட்டம்
•             சேவையாட்டம்
•             பேயாட்டம்
•             சாமியாட்டம்


கூத்துக்கள்:
•             சாந்திக் கூத்து
•             சாக்கம் மெய்க் கூத்து
•             அபிநயக் கூத்து
•             நாட்டுக்கூத்து
•             விநோதக் கூத்து
•             குரவைக் கூத்து
•             கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'
•             கரகம் என்னும் 'குடக் கூத்து'
•             பாய்ந்தாடும் 'கரணம்' நோக்கு 'பார்வைக் கூத்து'
•             நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'
•             'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு' பொம்மலாட்டம்

இவை எல்லாம் மேற்கத்திய நாகரீகத்தால் அழிந்து வரும் தமிழர் கலைகள். முன்பெல்லாம் திருவிழாக்களில் பத்து (அ) பதினைந்து நாட்கள் நடைபெறும். இப்போது அரை நாளில் முடிந்து விடுவதால், இந்த கலைகளும் முடிந்து வருகிறது. இனியாவது இக்கலைகளின் அருமை புரிந்து இவற்றை அழியாமல் பாதுகாப்போம்.

Credits:அதிசயம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



அரிய சுவையான தகவல்கள்-2


விஞ்ஞானிகள்மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.


1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம்இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்ததுஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



அரிய சுவையான தகவல்கள்


சில அரிய சுவையான தகவல்கள்

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 6 February 2013

பொது அறிவு-2


1.மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்து வயதிற்கு மேற்பட்டது.

2.எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.

3.ரீசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

4.பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.

5.கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் மொட்டுக்கள் வரை இருக்கும்.

6.ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காண முடியாதாம்.

7.ஆஸ்திரேலிய மலரான கேண்டிஸ் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றாழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

8.இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா.

9.ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால், மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.

10.ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.

11.இந்தியா, பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.

12.நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.

13.லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.

14.நாய் உணவில்லாமல் கூட இருந்து விடும். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் இறந்து விடும்.

15.கரப்பான் பூச்சிகள், பல்லிகள், விஷப் பாம்புகளை சாப்பிடும் ஒருவகை எட்டுக்கால் பூச்சி டாரண்டுலாவாகும்.

16.ஒரு தேனீ 4,000 பூக்களிலிருந்து சேகரிக்கும் தேன் ஒரு ஸ்பூன் அளவே ஆகும்.

17.காண்டாமிருகம் சுத்தமான சைவ விலங்கு.

18.காலில் கண் உள்ள பூச்சி வெட்டுக்கிளி.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday, 15 December 2012

சில பொது அறிவுத் தகவல்கள்



 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?


உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்கள்.

ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!








இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 9 December 2012

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்:-

1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :

1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்

2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா

3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து

4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து

6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு

7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு

9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 3 December 2012

தக்காளி பற்றிய தகவல்


 தக்காளி பற்றிய தகவல்...

இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம், பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாயவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்பத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக்கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலும், இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கிறன.

இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னீசியம் சிமெண்ட்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

வைட்டமின் சி குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் சி தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

மற்றும் வைட்டமின் பியும் சியுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கூட இருக்கிறது.

தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.
 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 2 December 2012

பூக்களால் குணமாகும் சில நோய்கள்


பூக்களால் குணமாகும் சில நோய்கள்:-

1.தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

2.ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். சுறுசுறுப்பபாகவும் இருக்கலாம்.

3.வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

4.ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும்.

5.மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

6.தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.

7.தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள்ரணம் குணமடையும்.

8.ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம்கூடும்.

9.செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியடையும்.

10.மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

11.வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமைபெறும்.

12.உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட உஷ்ணபேதி குணமாகும்

நன்றி
karthikeyan

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பொது அறிவு 1

பொது அறிவு -1

1. ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் உள்ள ஒரே பழம் வாழைப்பழம்.

2. புல்லாங்குழலில் 7 துவாரங்கள் உள்ளன.

3. வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.

4. பென்சில் தயாரிக்க காரியம், களிமண், மரக்கூழ் ஆகிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

5. கோல்ஃப் பணக்காரர்களின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது.

6. குரங்கில் 600 வகைகள் உள்ளன.

7. பெண் குயில் பாடாது.

8. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்கள்.

9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.

10. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி.

11. "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தைத் தந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

12. இங்கிலீஷ் கால்வாய் என்பது கால்வாய் அல்ல கடல்.

13. உலகிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்.

14. ரபீந்தரநாத் தாகூரின் சுயசரிதை நூலின் பெயர் "எனது நினைவுக் குறிப்புகள்'.

15. டாக்டர் அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் பெயர் "அக்கினிச் சிறகுகள்'.

16. திரு.வி.க.வின் சுயசரிதை நூலின் பெயர் "என் வாழ்க்கைக் குறிப்புகள்'.

17. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதை நூலின் பெயர் "என் சரிதம்'.

18. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதை நூலின் பெயர் "என் கதை'.

19. கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை நூலின் பெயர் "வனவாசம்'.

20. நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது கிவி.

21. வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி.

22. கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.

23. கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும்.

24. ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும்.

25. கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும்.

26. அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன்.

27. பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர்.

28. ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது.

29. பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

30. வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது.

31. பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது.

32. இந்திய வானொலியின் பழைய பெயர் "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது.

33. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

34. ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது.

35. கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 28 November 2012

வியந்து தான் போவீர்கள் - 1

வியந்து தான் போவீர்கள் - 1

1.நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

2.சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

3.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

4.நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

5.கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

6.மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

7.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

8.மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று 


நோய் தாக்கி இறந்துப் போனார்.

9.பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

10.உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

11.ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

12.பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

13.பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

14.நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

15.நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

16.யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

17.ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

18.தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

19.முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

20.தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 26 November 2012

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது 
எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

-Sasi Dharan-
பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

-Sasi Dharan-

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 16 November 2012

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....
...
என்னப்பா இது கரென்ட் இல்லை, இன்வெர்ட்ட்டர் பால் இல்லாத குழந்தை போல கதறுது என்ன வாழ்க்கை டானு நொந்து போறவங்களுக்க
ு ஒரு குட் நியூஸ், நிறைய தண்ணி குடிச்சா இனிமே நிறைய கரென்ட் கிடைக்கும்....ஒரே கொய்ப்பமா கீதா - நைஜீரியா டீன் ஏஜ் பொன்னுகள் எல்லாம் சேர்ந்து இப்ப நம்ம நார்மல் ஜெனரேட்டருக்கு தேவையான பெட்ரோல், டீஸல் அல்லது கெரசின் இல்லாம ஒரு மாற்றும் எரி பொருள் அதாவது சிறுநீர் கழித்தாலே போதும்னு நிருபிச்சி இருக்காங்க, இதன் செயல்முறை விளகத்தை பார்ப்போம். ஒரு லிட்டர் சிறுநீர் 6 மணி நேர ஓடும். முதல்ல உச்சா போன டேங்கை ஒரு எலக்ட்ரோடிக் ஷெல் மூலமா பாஸ் பண்ணனும். அங்கே அது ஹைட்ரஜனை நீக்கி இன்னும் ஒரு சேம்பருக்கு சுத்தகரிப்புக்காக செல்லும். அங்கிருந்து படத்தில் உள்ள பச்சை சிலின்டருக்குள் செலுத்தபட்டு அந்த சிலின்டரில் இருக்கும் போராக்ஸ் சிறுநீரில் உள்ள ஈரப்பசையை நீக்கி அது டெஸ்லா - டாஸ்டிக் மின்சாராமாக வெடித்து அது ஜெனேரட்டருக்குள் செல்லும். இது ஒரு லோக்கல் பாம் போல் தான் இப்போது எந்த வித வால்வுகளும் இல்லாமல் செயல்ப்டுகிறது ஆனால் இது வே பாதுகாப்பாக செய்யும் தூரம் வெகுதூரத்தில் இல்லை. நானும் இதே போல் மாற்று எரி பொருள் கொண்ட ஜெனரேட்டரை "கண்டிப்பாக" அடுத்த வாரம் லான்ச் செய்கிறேன். ஏற்கனவே பசங்க படிக்கலைனா அந்த பொன்னுதை வாங்கி குடின்னு பெற்றோர் சொல்லி டார்ச்சர் பன்றாங்க இதுல 14 - 15 வயசு பொன்னுங்க இதை வேற கண்டுபிடிச்சிட்டாங்க பசங்களா உங்களுக்கு டைம் சரியில்லை... சரி எல்லாம் கேனை ரெடி பன்னிக்கோங்க ஸ்டார்ட் உச்சா இனிமே ஒழுங்க உச்சா போககூட துப்பில்லை நீயெல்லாம் ஒரு புருஷனா, நீயெல்லாம் ஒரு பிள்ளையாடான்னு எல்லார் வீட்டிலேயும் ஏன்டா பீரை குடிச்சு அதை ஒழுங்கா பொறுப்பா வீட்ல வந்து உச்சா போனும்னு தெரியாதா - எனக்கு பெத்ததும் சரியில்லை, வாய்ச்சதும் சரியில்லைனு குரல் கேட்க போகுது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்