Thursday 6 December 2012

அநாதை இல்லத்தில்

அநாதை இல்லத்தில்
இருந்த பாட்டி
எடுத்துவரபபட்டால் பிணமாக
அந்த செல்வந்தர் வீட்டுக்கு

அழகான பந்தல் போடப்பட்டது
ஊர்முழுதும் அஞ்சலி சுவரொட்டி
ஒட்டப்பட்டது
அவளின் மகன்
கருப்புசட்டை அணிந்து
கண்களில் கண்ணீருடன்
ஊர் கூடி
துக்கம் கேட்டது

பல்லக்கு பாடை
பாண்டு வாத்தியம் முழங்க
வானவேடி அதிர
அந்த பாட்டி குழிக்குள்
சமாதியானால்

சாவு செலவு
பல லட்சம் ஆகியிக்கும்
என்ன செலவு
பெத்த தாய்க்கு
மகன் செய்த கடமை
ஊர் முழுதும் பேச்சு

அநாதை விடுதியில்
அவள் இருந்த இருப்பு
அவர்களுக்கு என்ன
தெரியபோகிறது!!


- கொங்கு காதல் குரு

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment