Friday 30 November 2012

நகங்களை பயன்படுத்த வேண்டாம்


அவசியம் படிக்கவும்...!

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது...

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்...

ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது. எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது...

நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
அவசியம் படிக்கவும்...!

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது...

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்...

ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது. எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது... 

நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்...!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday 29 November 2012

முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



டிசம்பர் 2012 ஆனது ஒரு அதிசயம்


Galactic alignment on December 2012!

எதிர்வரும் டிசம்பர் 2012 ஆனது ஒரு அதிசயம் மிக்க டிசம்பர் மாதமாகக் கருதப்படுகிறது. அதற்க்குக் காரணம் இந்த டிசம்பர் மாதத்தில் கிரகங்கள் நேர்கோட்டிலும் மற்றும் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வருவதே. இவ்வாறான டிசம்பர் மாதமானது 26,000 வருடங்களுக்கு ஒருமுறையே வருவதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான டிசம்பர் மாதத்தை சீனர்கள் பணப்பொதி அதாவது "மணி பேக்" என அழைக்கின்றனர்
Galactic alignment on December 2012!

எதிர்வரும் டிசம்பர் 2012 ஆனது ஒரு அதிசயம் மிக்க டிசம்பர் மாதமாகக் கருதப்படுகிறது. அதற்க்குக் காரணம் இந்த டிசம்பர் மாதத்தில் கிரகங்கள் நேர்கோட்டிலும் மற்றும் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வருவதே. இவ்வாறான டிசம்பர் மாதமானது 26,000 வருடங்களுக்கு ஒருமுறையே வருவதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான டிசம்பர் மாதத்தை சீனர்கள் பணப்பொதி அதாவது "மணி பேக்" என அழைக்கின்றனர்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உடல் நல குறிப்புக்கள்

உடல் நல குறிப்புக்கள்:-

உடல் பெருக்கக் காரணம்

நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

அடிக்கடி நீர் குடித்தால்...

ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் பருகவேண்டும். இதனால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். அதேபோல் மாதத்திற்கு ஒருநாள் வெறும் திரவ உணவை உட்கொண்டால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

சைவமா... அசைவமா?

சைவ உணவு சாப்பிடுவோரை விட அசைவ உணவு சாப்பிடுவோரே குண்டாகி வருகின்றனர். ஏனென்றால் அசைவ உணவில் கொழுப்புச் சத்துகள் அதிகமாக உள்ளன. ஆனால் அசைவ உணவில் உடலுக்குத் தேவையான புரதசத்தும், ஊட்டச் சத்தும் கிடைக்கிறது.

எத்தனை கலோரி தேவை?

ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 1200 கலோரிகள் தேவைப் படுகிறது. அதற்கு மேல் நாம் சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் உடம்பிலேயே தங்கிவிடுவதால் நாளடைவில் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.

வைட்டமின் சி குறைந்தால்...

முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கேரட், கீரை, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் குறைந்தால் உடல் எலும்புகள் பலவீனமாகும். பற்களில் பிரச்சினைகள் ஏற்படும்.

உதடுகள் வெடித்தால்...

கல்லீரல், கோழி, மீன், பால், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி2 அதிகமாக உள்ளது. இது உடலில் குறைந்தால் உதடுகள் வெடிக்க ஆரம்பித்து விடும்.

ஆரோக்கியத்துக்கு அவசியம்!

வெண்ணை, பால், பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, எலுமிச்சை, இறைச்சி, வாழைப்பழம், அன்னாசிபழம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

சாப்பிடும்போது இடையே...

உணவு சாப்பிடும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு அதிகமாக நீர் அருந்தினால் உணவு ஜீரணம் ஆகாது. அதுபோல் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள், வைட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்ளாது.

தூங்கி எழுந்தவுடன்...

தூங்கி எழுந்தவுடன் விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது உடல் ஆரோக்கியம் பெறும். இதனால் மலச்சிக்கலும் ஏற்படாது. மேலும் சிறுநீர் கற்களும் ஏற்படாது.

நீர் குடிக்காவிட்டால்...

உடற்பயிற்சி செய்பவர்கள் வேர்வையாக வெளியிட்ட நீரை ஈடுகட்ட தாராளமாக நீர் அருந்துவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு! அதேபோல், தக்காளி, பால், உப்பு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

வேப்பிலையின் நன்மை!

வேப்பிலைக் கொழுந்து கசக்காது! இதில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. வேப்பிலைக் கொழுந்தை சுத்தம் செய்து துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



எளிமையான வீட்டு மருத்துவக்குறிப்புகள்

எளிமையான வீட்டு மருத்துவக்குறிப்புகள்:-

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
-------------------------------------------------------------------------------------------------
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
---------------------------------------------------------------------------------------------
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
-------------------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
------------------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
---------------------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
---------------------------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
-------------------------------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
-------------------------------------------------------------------------------------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
------------------------------------------------------------------------------------------------
மார்புச் சளி
வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
-------------------------------------------------------------------------------------------------
சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
-------------------------------------------------------------------------------------------------
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
------------------------------------------------------------------------------------------------
வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.
-----------------------------------------------------------------------------------------------
வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பிளக்ஸிபில் டிஸ்ப்ளே


செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது. 

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology. 

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday 28 November 2012

இட்லி என்றால் என்ன...?

இட்லி என்றால் என்ன...? நண்பர்களே இட்லி க்கு தமிழ் பெயர் என்னனு தெரியுமா.? - பெயர்க்காரணம், விளக்கம் தெரிஞ்சுக்கோங்கப்பா...

இட்டவி(இட்டு+அவி).இட்டவியே காலபோக்கில் மருவி இட்லி ஆகிவிட்டதாக கூறுவா்.

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு.பண்டம்
இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.
தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு.
இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது
. வெண்மையான நிறத்தில் இருக்கும்.
அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது
இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து
மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
சட்னி
சாம்பார்
மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி
சர்க்கரை
தயிர்

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு ஆகும்.
எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.

செய்முறை

தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.
இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



வியந்து தான் போவீர்கள் - 1

வியந்து தான் போவீர்கள் - 1

1.நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

2.சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

3.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

4.நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

5.கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

6.மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

7.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

8.மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று 


நோய் தாக்கி இறந்துப் போனார்.

9.பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

10.உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

11.ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

12.பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

13.பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

14.நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

15.நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

16.யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

17.ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

18.தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

19.முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

20.தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 27 November 2012

தனியார் முதலிட்டில், பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் 'மின்சாரம் '

தனியார் முதலிட்டில், பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் 'மின்சாரம் '.

இன்று நாம் சந்தித்து கொண்டு இருக்கும் மிக முக்கியமான பிரச்னை 'மின்சாரம்'.
நான் இத் திட்டத்தினால் பொது மக்களும் , தொழில் துறை , மருத்துவமனை , ஷாப்பிங் malls க்கு ஆகும் மின்சாரத்தில் 40 % பூர்த்தி அடையும். சூரிய கதிர் ஆற்றலால் அவர்களுக்கு முதலிடு இல்லாமல் 
( தனியார் முதலிடின் முலமாக) அரசாங்க விலையிலே அவர்களுக்கு மின்சாரம் விநியோகம் செயப்படும். சுமார் 80 கிராமங்களுக்கு உபயோகப்படும் மின்சாரம் ஒரு ஷாப்பிங் mall க்கு செலவுஅகிறது. ஜென்ரடேர்களுக்கு ஆகும் diesel செலவு , அதனால் சுற்று சுழல்க்கு 
ஏற்படும் மாசு தனி.
இத் திட்டத்தினால் அரசாங்கத்திற்கு மிச்சம் ஆகும் மின்சாரத்தை கொண்டு பல கிராமங்களுக்கு மின் தடையை போக்க முடியும்..

1 ) பயனாளிகளுக்கு முதலிடு கிடையாது
2 ) குறைந்தபட்சம் 100 kw , அல்லது அதற்கு மேல் உபயோகம் இருக்க வேண்டும் .
3 ) பயனாளிகளின் மேல்தளத்தில் , அல்லது கார் நிறுத்தும் இடத்தின் மேல் , அல்லது திறந்த வேலி,(உதாரண படங்களுக்கு கிளிக் செய்யவும், https://www.facebook.com/media/set/?set=a.430810496973863.104702.100001347497696&type=1 ) இடத்தில தகுடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்து அவர்களுகே கொடுக்கப்படும்.
4 ) அரசாங்க விலையிலே அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
5 ) தகுடுகளை பராமரிப்பது , பழுது நீக்குவது , உதிரிகள் மாற்றுவது அதுவும் எங்களது செலவிலே செயப்படும்.
6 ) 100 kw குறைந்தபட்சம் 5000 சதுரடிகள் மட்டுமே போதுமானது .
7 ) இத் திட்டம் முற்றிலும் தனியார் முதலிட்டாளர்கள் / வங்கிகளின் மூலம் நிறைவேற்ற படும்.
8 ) இத்திடத்தின் மூலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க படும்.
9 ) இத்திடத்தின்னால் ஜென்ரடேர்களுக்கு ஆகும் diesel செலவு மிச்சம், (லிட்டர் Rs ,50 ) diesel வாங்க அலையும் நேரமும் மிச்சம் .

இத்திடத்தின் மூலம், மிச்சமாகும் மின்சாரத்தை கொண்டு அரசாங்கம் சிறு , குறு தொழில் உற்பதியலர்களுகும் , மற்றும் பொது மக்களுக்கும் மின்சாரத்தை வழங்க முடியும், இதனால் தொழில் துறை பெருகும் , நாடும் முன்னேற்றம் அடையும்.
நண்பர்களே, வாய் வழியாகவும் , முக நுல் வழியாகவும் நண்பர்களிடமும் , நண்பர்களின் நண்பர்களிடமும் இச்செய்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

Srinivas Tiwari
Gmed marketing Pvt Ltd

9840968815,
gmedindia@gmail.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday 26 November 2012

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது 
எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

-Sasi Dharan-
பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

-Sasi Dharan-

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday 16 November 2012

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....
...
என்னப்பா இது கரென்ட் இல்லை, இன்வெர்ட்ட்டர் பால் இல்லாத குழந்தை போல கதறுது என்ன வாழ்க்கை டானு நொந்து போறவங்களுக்க
ு ஒரு குட் நியூஸ், நிறைய தண்ணி குடிச்சா இனிமே நிறைய கரென்ட் கிடைக்கும்....ஒரே கொய்ப்பமா கீதா - நைஜீரியா டீன் ஏஜ் பொன்னுகள் எல்லாம் சேர்ந்து இப்ப நம்ம நார்மல் ஜெனரேட்டருக்கு தேவையான பெட்ரோல், டீஸல் அல்லது கெரசின் இல்லாம ஒரு மாற்றும் எரி பொருள் அதாவது சிறுநீர் கழித்தாலே போதும்னு நிருபிச்சி இருக்காங்க, இதன் செயல்முறை விளகத்தை பார்ப்போம். ஒரு லிட்டர் சிறுநீர் 6 மணி நேர ஓடும். முதல்ல உச்சா போன டேங்கை ஒரு எலக்ட்ரோடிக் ஷெல் மூலமா பாஸ் பண்ணனும். அங்கே அது ஹைட்ரஜனை நீக்கி இன்னும் ஒரு சேம்பருக்கு சுத்தகரிப்புக்காக செல்லும். அங்கிருந்து படத்தில் உள்ள பச்சை சிலின்டருக்குள் செலுத்தபட்டு அந்த சிலின்டரில் இருக்கும் போராக்ஸ் சிறுநீரில் உள்ள ஈரப்பசையை நீக்கி அது டெஸ்லா - டாஸ்டிக் மின்சாராமாக வெடித்து அது ஜெனேரட்டருக்குள் செல்லும். இது ஒரு லோக்கல் பாம் போல் தான் இப்போது எந்த வித வால்வுகளும் இல்லாமல் செயல்ப்டுகிறது ஆனால் இது வே பாதுகாப்பாக செய்யும் தூரம் வெகுதூரத்தில் இல்லை. நானும் இதே போல் மாற்று எரி பொருள் கொண்ட ஜெனரேட்டரை "கண்டிப்பாக" அடுத்த வாரம் லான்ச் செய்கிறேன். ஏற்கனவே பசங்க படிக்கலைனா அந்த பொன்னுதை வாங்கி குடின்னு பெற்றோர் சொல்லி டார்ச்சர் பன்றாங்க இதுல 14 - 15 வயசு பொன்னுங்க இதை வேற கண்டுபிடிச்சிட்டாங்க பசங்களா உங்களுக்கு டைம் சரியில்லை... சரி எல்லாம் கேனை ரெடி பன்னிக்கோங்க ஸ்டார்ட் உச்சா இனிமே ஒழுங்க உச்சா போககூட துப்பில்லை நீயெல்லாம் ஒரு புருஷனா, நீயெல்லாம் ஒரு பிள்ளையாடான்னு எல்லார் வீட்டிலேயும் ஏன்டா பீரை குடிச்சு அதை ஒழுங்கா பொறுப்பா வீட்ல வந்து உச்சா போனும்னு தெரியாதா - எனக்கு பெத்ததும் சரியில்லை, வாய்ச்சதும் சரியில்லைனு குரல் கேட்க போகுது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 4 November 2012

கண் தானம் - EYE DONATION


கண் தானம் - EYE DONATION

கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
.
தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.
.
கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?
.
விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.
.
விழி வெண்படலம் என்றால் என்ன?
.
கண்ணீரின் கறுப்பான பகுதிக்கு முன்பு வெளிப்படையாக தெரியும் வெண்படலமே விழி வெண்படலம் என்ற கார்னியா ஆகும். இதுதான் ஒளிக்கதிர்களை குவித்து, கண்ணுக்குள் இருக்கும் ஒளியுணர்வு ஜவ்வுக்கு அனுப்புகிறது. ஆகவே கண் அமைப்பிலேயே மிகவும் முக்கியமான பகுதி இதுவே. கண்ணின் ஒளி ஊடுருவும் தன்மை சேதமடையும்போது பார்வை இழப்பும் ஏற்படுகிறது.
.
விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
.
பழுதடைந்து பார்வை சக்தியை இழந்த விழிவெண்படலத்தை தானமாக வந்த கண்ணின் வெண்படலம் மூலமாக மாற்று அறுவை சிகிச்சை செய்தலே இத்தகு அறுவை சிகிச்சை.
.
விழிவெண்படலம் பழுதடைவது ஏன்?
.
1. நோய்க்கிருமி
2. காயங்கள்
3. மருத்துவர்களால் ஏற்படுவது
4. ஊட்டச்சத்து குறைவு
5. பிறவி / மரபணு.
.
யார் கண்தானம் செய்ய முடியும்?
.
1 வயது முதல் கண்தானம் செய்யலாம். இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday 2 November 2012

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!

Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .

Web Development Language என்ன ?

இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.

1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.

2. Hscripts - http://www.hscripts.com/tutorials/index.php
இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது.

3. HTML.net - http://www.html.net/
HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

4. jQuery - http://jquery.com/
Query ஆனது ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும். இதை jquery தளத்திலேயே கற்கலாம்.
இதை வீடியோ Tutorials ஆக முப்பது நாளில் படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்.

5. HTML Code Tutorial - http://www.htmlcodetutorial.com/
மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும்.

6. HTML 5
இணையத்தின் எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை W3Schools இலவசமாக கற்று தருகிறது, மற்ற சில தளங்கள்

HTML5 Doctor -
http://html5doctor.com/article-archive/
HTML5 Tutorial -
http://www.html-5-tutorial.com/

slides.html5rocks -
http://slides.html5rocks.com/#landing-slide

HTML 5 Rocks -
http://www.html5rocks.com/en/

இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்:

Quackit -
http://www.quackit.com/

Web Design Library -
http://www.webdevelopersnotes.com/

Web Developers Notes -
http://learn.appendto.com/

appendto - jQuery & Java Script -
http://www.webdesign.org/ 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி


தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. (http://download.cnet.com/TeamViewer/3000-7240_4-10398150.html?part=dl-6271747&amp%3Bsubj=dl&amp%3Btag=button)
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.


இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்.











இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்