Tuesday 28 August 2012

பேரறிஞர் அண்ணா

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்...தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன. சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு வீதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!

உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.

இதைக் கேட்டுப் பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர். இதற்கு ''ஆமாம், அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment